செவ்வாய், 12 ஜூன், 2018

இனிய மாலை வணக்கம்...                                                                                                             இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் குறுவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முயாத சூழ்நிலை உள்ளதாகக் கூறினார். அதற்கு பதிலாக குறுவை சாகுபடித்திட்டம் என்று சொல்லி அதற்கு தனியாக ஒரு குறிப்பிட்டத் தொகையை மானியமாகத் தருவதாக அறிவித்துள்ளார். விவசாய மக்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல், வெறும் மானியமாக பணத்தை மட்டும் கொடுத்தால் விவசாயம் செய்துவிடமுடியும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். முதலில் தண்ணீர் இல்லாமல் எப்படி விவசாயம் செய்ய முடியும். டெல்டா விவசாய மக்களின் நிலை மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. அனைவரும் அதிக மழை வேண்டி கடவுளை பிராத்திப்போம்.                  நன்றி... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக