வியாழன், 18 நவம்பர், 2021

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

இரண்டடி ஆசான்
இருந்தான் அன்றொரு நாள்
ஏழடி சீர் படைத்து மானிடத்தை
ஏற்றம் பெறச் செய்தான்

தாடியுடன் வார்த்தை
வேள்விகளைச் செய்து
மனித மனங்களை
கசக்கிப்பிழிந்த
கொல்லன் அவன்

அறம் பொருள் இன்பம்
என்ற மூன்று இயலையும்
குறையாத சுவையோடு
பந்திவைத்தப் பகுப்பாளன்

ஏடில்லா காலத்திலே
எழுத்தானி கொண்டு
ஓலைச்சுவடியில்
வரிகளை வடித்த
வார்த்தை வித்தகன்…

அரசலையும், புரசலையும்
அரசியலையும், அறிவியலையும்
அன்றே அறிவுக்கு கிட்டச் செய்த
ஆய்வாளன் அவன்…

வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே என
புதுவைக்குயில் புதிய சரித்திரம்
படைத்த சிம்ம சொப்பனமே…

காலங்களைக்கடந்து  நிற்கும்
கருத்து குவியல்களை
கண்ணோடு ஒத்தியெடுக்க- இரு

கண்களும், கரங்களும் போதாதே…

ஆசிரியர் தின விழா – கவிதைத்தொகுப்பு


ஆசிரியர் தின விழா – கவிதைத்தொகுப்பு



அறப்பணியாம் ஆசிரியப்பணியை சீருடனும் சிறப்புடனும் ஆற்றிக்கொண்டிருக்கும் நமது பேராசிரியப் பெருமக்களுக்கு நம் மாணவர்கள் சார்பாக ஆசிரியர் தின விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இந்த கவிதைத் தொகுப்பை சமர்ப்பிக்கிறேன்.

கல்வி ஆசான்களை அடையாளப்படுத்தும்
அற்புதத் திருநாள் இந்த
ஆசிரியர் தின நாள்..

ஆசிரியர்களின் நல் ஆசானாய்த் திகழும்
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்
இந்த ஆசிரியர் தின நாள்..

வந்தனம் செய்வோம் நல்
வந்தனம் செய்வோம்
கல்வி மூலம் வாழ்க்கைக்கு நல்
வழி கர்றுத்தந்த ஆசான்களுக்கு
வந்தனம் செய்வோம்..
நின்ற இடத்திலே நின்று
நித்திய சத்திய புத்திய
போதனைகளைக் கற்பித்து
வெற்றியின் உச்சத்தைத் தொட
வேதனைகளையும், சோதனைகளையும்
துச்சமென மதித்து
சாதனை, சரித்திரம் படைக்க
சூத்திரப் பாடம் கற்றுத்தரும்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..
கலைகள் யாவும் கற்றுத்தந்து
கட்டிக்கரும்பு சாறுபிழிந்து
பாடங்களை பாங்கோடு பருகச்செய்யும்
புத்திரர்களான நம் ஆசான்களை
வந்தனம் செய்வோம்..
சிந்திக்க மறந்த மனங்களை
உள்ளன்பு உவகையோடு தட்டியெழுப்பி
கல்வி தானம் தரும் நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..
ஐந்தில் வளையாததை அகவை
முப்பதிலும் வளைத்து நெளித்து
தங்கத்துகள்களால் புடமிட்டு
மிளிரச்செய்யும் மந்திரம் தெரிந்த நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..

கல்வி பிறருக்கு கொடுப்பதால்
என்றுமே குறைவுபடாது என்ற
ஒளவைப் பாட்டியின் ஓதலை உணர்ந்து
உவப்புடனே உள்ளங்களைத் தொட்ட நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..

இக்கவிதைத் தொகுப்பு வெறும்
வார்த்தை ஜாலங்களுக்காக எழுதவில்லை
மாணவர்களாகிய எங்களுக்கு நல்வழிகாட்டும்
உங்களை இந்த ஆசிரியர் தின நாளில்
புகழ்வது தகும் என்பதாலே..

புதன், 29 செப்டம்பர், 2021

கடல் நீரில் என் கண்ணீர் பயணம்

                கடல் நீரில் என் கண்ணீர் பயணம்


ஊமையான என் பேனாஉதிற்கும் உன்னத முத்துக்கள்…

கடல் நீரில் ஒரு நெடும்பயனம் – என்
கண்ணீரோடு..
இதுவரை நீங்கள்
யாருக்காகவும் எதற்காகவும்
உங்களின் கண்களில்
கண்ணீர் வரவில்லை என்று நினைத்தாலும்
இந்த கவிதை பயணத்தின் மூலம் – என்
கவிதை வரிகள்
உங்களின் கண்களை குளமாக்கும்
என்பதில் ஐயமில்லை…
வாழ்க்கைப் படகில் பயணிக்க
எத்தனிக்கும் எல்லாரும் – என்
கவிதை என்னும் படகில் ஏறி
எழுத்து என்ற துடுப்பேந்தி
பயணம் செய்ய வாருங்கள்..
கலியுக உலகை மறந்து
கடந்து வந்த குழந்தை, மாணவ
இளமை பருவ காலங்களை
இனிமையாய் நினைத்து
ஆசையோடு அசைபோட
ஆவலுடன் வாருங்கள்...
எந்த கவலை துன்ப துக்க
நேரமானாலும், இந்த கண்னீர் பயணம்
உங்களின் மனங்களை படிக்கும்..
இதயங்களை இலகுவாக்கும்..
எப்பேர்ப்பட்ட பயணம்’’
இது ஒரு வரம்..


நதியின் நாதம்

                                                                நதியின் நாதம்
                                                     

                                                                       
நதியின் நாதம்
ஓடுகின்ற நதிக்கு 
  ஓடையின் வழியே                                                                                                                ஓதியது யாரோ?                                                                                                                                 நதி பிறந்தது நந்தவனத்தில்                                                                                                         நாங்கள் வாழ்வது அந்த வனத்தில்                                                                                             நதியின் நாதமும் அடியும்                                                                                                               நலன்கள் யாவும் பொழியும்                                                                                                           கரைதோறும்  நதியின் நுரை அரும்பும்                                                                                    குழவிகூட கொஞ்சும் அமுதம்                                                                                                     களிறு கூட கெஞ்சும் கமுகம்                                                                                                        சாதக சூத்திரங்களுக்கு நதியொரு அடி -என்று                                                                       சூசக சொல்லொன்றை கதியென்று நீ படி                                                                             கதிக்கும் யாவுன் கதியாகுமோ?                                                                                               கற்பனைக்கு அது ஈடாகுமோ?                                                                                                     நதிக்கொரு கீதம்                                                                                                                                 பதிக்கொரு கீதம்                                                                                                                                 கதிக்கொரு கீதம்                                                                                                                                சதிக்கொரு கீதம்                                                                                                                                சாதிக்கொரு கீதம்                                                                                                                             வீதிக்கொரு கீதம்                                                                                                                               வீட்டுக்கொரு கீதம்                                                                                                                           நதி வாழும் நாளெல்லாம் -நம்                                                                                                      நாடும் வாழும்                                                                                                                                     

புதன், 22 செப்டம்பர், 2021

மொழி


வாழ்வின் நெறிமுறையே மொழி                                                                                                வாழ்க்கையே மொழி...                                                                                                                     சத்தத்தின் வயிற்றில் தவமறியாது                                                                                         தானாகப் பிறப்பது மொழி..                                                                                                             நெகிழ்வையும், மகிழ்வையும்                                                                                                       நெஞ்சோடு இணைத்து                                                                                                                   எளிதில் பிறர் புரியும் வன்னம்                                                                                                      எடுத்தாளப்படுவது மொழி..                                                                                                           ஒலிப் பெற்ற பிள்ளைகள்                                                                                                               முத்தான எழுத்துக்கள்..                                                                                                                   கோர்க்கப்படும் முத்துக்கள் அழகான                                                                                       மாலையாவதைப்போல                                                                                                                 கோர்க்கப்படும்  எழுத்துக்கள் அர்த்தமுள்ள                                                                           வார்த்தைகளாக வார்க்கப்படும்..                                                                                                 மொழியின் மேன்மையை                                                                                                               மொழியறிந்தார் மொழிய - வழி                                                                                                   மொழியப்படுவது நீயதியே...                                                                                                         மொழியின் மாண்பையும்                                                                                                               மேன்மையையும் அறிந்து                                                                                                             மொழிக்கு முதல் வணக்கத்தை                                                                                                   மொழிவோம்...                                     

வியாழன், 9 செப்டம்பர், 2021

இளைஞனே எழு


                   எழு இளைஞனே...          



இளைஞனே …
இன்னுமா உறங்குகிறாய்…
இதயங்களை இலகுவாக்க                    
இன்பங்களை சுவைக்க
இன்புற்ற இதயத்துடனே
இன்னல்களையும்,
இடர்பாடுகளையும்
இடித்தெரிந்து
இடுக்கன் இடும்பை
இனி இல்லை என
இசைந்து எழுந்து வா இளைஞனே..

சோம்பேறிகளின் உலகமிது..
சுறுசுறுப்பான உனக்கு
சங்கடங்களும், சோதனைகளுமே
சிகரங்களின் உச்சமாய் உள்ளன..

எந்த சவால்களையும் துடிப்புடன்
சந்திக்கும் சாதனையாளனல்லவா நீ..
எதிரிகளின் முகத்திரைகளைக் கிழிக்க
இனியென்ன தாமதம்..

இளைஞர்களின் இதயத்தில்
உறங்கி கிடக்கும் உன்னதமான
அறிவாற்றலை அள்ளியெடுக்க
இந்த உலகமே தவமிருக்கிறது..

இந்த எண்ணம் பலருடைய ஆறாப்பசி..
எள்ளி நகையாடிய நரிக்கூட்டத்தின் நடுவில்
நங்கூரமாய் அசைக்கமுடியாத் திலகமிட்டு
வாழ்வின் ரசனையை ருசிபார்க்க
விரைவாய் வா இளைஞனே..

குலத்தையும் கோத்திரத்தையும் மறந்து
குறைவுள்ள மனங்களை களைந்து
குவலயமும் பெருமைபட வாழ்ந்து
குன்றின் மீது வெற்றிக்கொடி நீ ஏந்து..

அக்கினிச்சிறகுகள் வார்த்தெடுத்த தங்கங்களே
அடுத்த செயலை வெற்றியுடன் ஆற்ற
அரும்புகளாக முளைத்த என் பாச மொட்டுக்களே
அன்புடனே அரவனைக்க இந்த பூமி காத்திருக்கிறது
அசரா நம்பிக்கையுடன் துள்ளி வா இளைஞனே..

வேரறுந்த விழுதுகளையும்
வெட்கிக்குனிந்த நாளிகைகளையும்
வேதனையில் புழுங்கிய மனங்களையும்
விரட்டியடிக்க
வீரமுள்ள நெஞ்சினாய் வா இளைஞனே…

A.Joseph Jeyabal
s/o D. Arockia samy
21a/4-17- Joseph colony
Y.M.R. Patti, Dindigul-624001.
Cell:9698433326

Email: ajjeyabal1982@gmail.com

தீபாவளி திருநாள்

                                                                தீபாவளி திருநாள்


  மகிழ்ச்சி தீபங்கள் ஒளிர
  தீப ஒளியாம் தீபாவளித் திருநாள்..
  நெஞ்சத்தில்  இகழ்ச்சியை மறந்து
  புகழ்ச்சிப் பூவை ஒளியாக
  நம் மனங்கள் சுமக்கும் நன்னாள்..
  
  எரிகின்ற தீபங்களின்
  எண்ணமும் ஏக்கமும்..

  எல்லா நாழும்
  எங்களை தீபங்களாக
  ஏற்றுகின்றீர்கள்..
  என்றாவது ஒரு நாள்
  நீங்கள் யாருக்காகவாவது
  உங்களை நீங்கள்
  எரிகின்ற தீபங்களாக
  ஏற்றியிருக்கிறீர்களா?
  
  அடுத்தவரை அனையாத்தீயில்
  இட்டு கொளுத்துவது
  மனிதருக்கு எத்துனை இன்பம்?

  மானிடமே
  என்னைப் பார்த்துக்
  கற்றுக்கொள்ளுங்கள்..
  வகைகளில் நான்கு..
  விளக்கு, என்னெய்
  திரி,  தீ என..
  நால்வரும் இனைந்து
  உங்களுக்கு ஒளியைத்தருவது  போல்
  நீங்கள் ஏன்
  உடனிருப்பவருக்கு உதவ
  மறுக்கிறீர்கள்..
  
  தன்னலம் கருதாமல்
  தீயில் கருகி திரியான நான்
  உங்களுக்கு ஒளியைத் தருகிறேனே?
  பிறருக்காக உங்களை
  நீங்கள் உருக்க
  மறுப்பதேன்?
  
  என்னைப் பெருமைப்படுத்துவதாகச் சொல்லி
  எல்லாரும் புத்தடை உடுத்தி
  இனிப்புகள் உண்டு
  எனை மறந்து
  நீங்கள் மட்டும் மகிழ்வதேன்?
   
  எரிகின்ற தீபங்களை ஏற்றி
  ஒளியேற்றினால் மட்டும் போதுமா?
  இருட்டில் இருக்கும்
  உங்களின் மனங்களை
  என் ஒளிக்கு கொணர்வது எப்போது?

  விளக்கு எற்றி
  விருந்து படைப்பதாலே
  தீபாவளித்திருநாள்
  திருப்தி அடைந்து விட்டது
  என நினைத்து விடாதே..

  கும்மிருட்டில் வாழும்
  குருட்டு சமுதாயத்தை
  வீதியில் எரியும்
  வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்..

  குலம் கோத்திரம் என்ற
  கொடுமைகளை களைந்து
  மனிதன் மட்டுமே
  மீதியான ஜாதியென
  மனதார ஒப்புக்கொள்ள
  இந்தப்  பேரொளித்திருநாளாம்
  தீபாவளித்திருநாளைக்

  கொண்டாடி மகிழ்வோம்..

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

ஒரு காட்டமான செய்தி..

எல்லாருக்கும் ஒரு காட்டமான செய்தி..
ஏங்க.. பிளாக்கர்ல எழுதனும், பிளாக்கர்ல எழுதனும்னு சொல்ரீங்கலே.. நாங்க எழுதுனா யார் படிக்கிறது..
நானும் புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தேன். ஆனா, அதுக்கப்புறம் இதப்பத்தின ஒரு தகவலும் இல்லை. நான் என்னால முடுஞ்சத , எனக்கு தெரிஞ்சத பக்கத்தில் இருந்தவங்களுக்கு சொல்லிக்கொடுத்து பிளாக்கர்ல எழுதவச்சிருக்கேன்..
சரி ஒரு வேல நம்ம எழுதர பதிவு சரியில்லாம இருக்குமோனு கூட நெனச்சிருக்கேன்.இதுல என்னா கொடுமைய்னா, வலைப்பதிவுத்திருவிழாவில் பரிசுப்போட்டினு நடத்தி. நல்ல பழந்தின்னு கொட்ட போட்ட நபர்களுக்குத்தான் பரிசு கொடுத்தார்கள்..
அதில் யாருமே சாமானியர்கள் கிடையாது. எல்லாரும் பெரிய பெரிய கல்லூரிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்கள்.அவர்களுக்கு தெரியாத விசயங்கள் என்ன இருக்கு?படித்தவர்கள் பொதுவாக நிறைய தெரிஞ்சு வைத்திருப்ப்பார்கள். சரி நீங்க எப்படியோ போங்க..
நாங்கள் எழுதிக்கொண்டு இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு எப்படித்தெரியும். புதுசா எழுதர எங்களமாதிரி புதுப்பதிவர்களுக்கு ஒரு பிடிப்புமே இல்லை. தமிழை வளர்க்க எல்லாருடைய பங்கும் முக்கியம் என்பதை நீங்க எல்லாரும் புரிஞ்சுக்கனும்
இதுல நிறைய விசயங்கள் கொட்டிக்கிடக்குது.ஆனா அத எப்படி தெரிஞ்சுக்கிறதுன்னுதான் தெரியல. ம்ம்…
ஏதோ, பிளாக்கரப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சது. அதனால தான் இவ்வளவுதூரம் அதுவும் தமிழில் தட்டச்சு வரைக்கும் தெரிஞ்சது..இத எல்லாருக்கும் நான் சொல்லலாம்னா தெரியல..

 ஏதோ என்மசில் பட்டத இந்த பதிவில சொல்லனும்னு நெனச்செ.. சொல்லிட்டேன்.. அவ்வளவுதான்..

புதன், 4 ஆகஸ்ட், 2021

தன்னம்பிக்கை


தன்னம்பிக்கை                                                                                                                                   ஒருவர் தன் மீதும் தன் ஆற்றல் மீதும் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.தன்னம்பிக்கை இல்லாதவர்களே தோல்வியைக்கண்டு அஞ்சுவார்கள்.தன்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைத்து மனம் தளர்ந்துவிடுவார்கள்.                                                                                                         தன்னம்பிக்கை என்பது ஒருவர் தனக்குள் கொள்கின்ற சுய தயாரிப்பே ஆகும். அவர் தன்னை அவ்வாறு தயாரித்துக்கொள்ளும் போது, தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்கிறார்.அப்போது தன்னுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி, தான் அடைய விரும்பும் இடத்தையும் சென்று அடைந்துவிடுகிறார். தன்னம்பிக்கை ஒருவரை நேர்வழியில் சிந்திக்க வைக்கிறது.                                                                                                                                          தன்னைப் பற்றிய சுய உணர்வே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள். நம்மைப் பற்றி நாம் என்ன எண்ணம் கொண்டிருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது மகிழ்ச்சியும் சாதனையும் அமைகின்றன என்கிறார்கள்.                                                 வளமான மனமும் தன்னைப் பற்றிய மேன்மையான சுய உணர்வும் கொண்டவர்கள் தன்னை மதிப்பதோடு தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் மதிக்கிறார்கள். ஒருவருடைய சுய உணர்வே அவருக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. சுய உணர்வு உடையவர்கள் தங்கள் பலத்தைத் தெரிந்துகொள்வதோடு தங்களுடைய பலவீனத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால், தங்களுக்குக் கிடைக்கும் உண்மையான பெயரையும் புகழையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

எ ன் தா ய் மொழியாம் தமிழ் மொழிக்கு

எ ன்  தா ய்  மொழியாம் தமிழ் மொழிக்கு 




செந்தமிழ் தாய் மொழியாள் – நம்
செவ்விதழ் வாய் மொழியாள்
சிந்திய தேன் மொழியாள் – நம்
இந்திய தேசத்து செம்மொழியாள்..

மூலமொழிக்கு முதல் மொழியாம் – நம்
முத்தமிழ் செந்தமிழ் தனி மொழியாம்
முத்துக் குளித்த முதல் மொழியாம் –நம்
மூத்தோர் மூதுரைத்த இன் மொழியாம்..

அகத்தியன் முதலாய் தொல் காப்பியன் ஈறாய்
ஆயிரம் பாவலர் புனைந்த நல் நாற்றாய்
இலக்கணச் சுவையோடு நற்குணம் ஏற்றாய்
உள்ளம் பெரிதுவக்க அடியார்க்கு ஈந்தாய்..

உந்தி முதலா முந்திவளி தோன்றி
உயிர்முன் மெய்யாய் மெய்முன் உயிறாய்
ஒற்றுமுன் பகுதி விகுதி சந்தியாய் தெளிந்த
நல்பதம் சேர்க்கும் கண்மனியாள்..

அகம் புறம் நானூறும் அடக்கி
தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கியமும்
பதினெண் கீழ்மேல் கணக்கென
பொழிந்த நற்றமிழ் கண்மனியாள்..

தமிழின் மீது தணியாத தாகம் கொள்வோம்
தரணியில் சிறந்தது தமிழென மொழிவோம்
தமிழால் தமிழ்க்குடி தழைக்கு மென்போம்
தமிழே உயிர் மூச்செனக் கொள்வோம்..