வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

ஒரு காட்டமான செய்தி..

எல்லாருக்கும் ஒரு காட்டமான செய்தி..
ஏங்க.. பிளாக்கர்ல எழுதனும், பிளாக்கர்ல எழுதனும்னு சொல்ரீங்கலே.. நாங்க எழுதுனா யார் படிக்கிறது..
நானும் புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தேன். ஆனா, அதுக்கப்புறம் இதப்பத்தின ஒரு தகவலும் இல்லை. நான் என்னால முடுஞ்சத , எனக்கு தெரிஞ்சத பக்கத்தில் இருந்தவங்களுக்கு சொல்லிக்கொடுத்து பிளாக்கர்ல எழுதவச்சிருக்கேன்..
சரி ஒரு வேல நம்ம எழுதர பதிவு சரியில்லாம இருக்குமோனு கூட நெனச்சிருக்கேன்.இதுல என்னா கொடுமைய்னா, வலைப்பதிவுத்திருவிழாவில் பரிசுப்போட்டினு நடத்தி. நல்ல பழந்தின்னு கொட்ட போட்ட நபர்களுக்குத்தான் பரிசு கொடுத்தார்கள்..
அதில் யாருமே சாமானியர்கள் கிடையாது. எல்லாரும் பெரிய பெரிய கல்லூரிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்கள்.அவர்களுக்கு தெரியாத விசயங்கள் என்ன இருக்கு?படித்தவர்கள் பொதுவாக நிறைய தெரிஞ்சு வைத்திருப்ப்பார்கள். சரி நீங்க எப்படியோ போங்க..
நாங்கள் எழுதிக்கொண்டு இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு எப்படித்தெரியும். புதுசா எழுதர எங்களமாதிரி புதுப்பதிவர்களுக்கு ஒரு பிடிப்புமே இல்லை. தமிழை வளர்க்க எல்லாருடைய பங்கும் முக்கியம் என்பதை நீங்க எல்லாரும் புரிஞ்சுக்கனும்
இதுல நிறைய விசயங்கள் கொட்டிக்கிடக்குது.ஆனா அத எப்படி தெரிஞ்சுக்கிறதுன்னுதான் தெரியல. ம்ம்…
ஏதோ, பிளாக்கரப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சது. அதனால தான் இவ்வளவுதூரம் அதுவும் தமிழில் தட்டச்சு வரைக்கும் தெரிஞ்சது..இத எல்லாருக்கும் நான் சொல்லலாம்னா தெரியல..

 ஏதோ என்மசில் பட்டத இந்த பதிவில சொல்லனும்னு நெனச்செ.. சொல்லிட்டேன்.. அவ்வளவுதான்..

புதன், 4 ஆகஸ்ட், 2021

தன்னம்பிக்கை


தன்னம்பிக்கை                                                                                                                                   ஒருவர் தன் மீதும் தன் ஆற்றல் மீதும் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.தன்னம்பிக்கை இல்லாதவர்களே தோல்வியைக்கண்டு அஞ்சுவார்கள்.தன்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைத்து மனம் தளர்ந்துவிடுவார்கள்.                                                                                                         தன்னம்பிக்கை என்பது ஒருவர் தனக்குள் கொள்கின்ற சுய தயாரிப்பே ஆகும். அவர் தன்னை அவ்வாறு தயாரித்துக்கொள்ளும் போது, தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்கிறார்.அப்போது தன்னுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி, தான் அடைய விரும்பும் இடத்தையும் சென்று அடைந்துவிடுகிறார். தன்னம்பிக்கை ஒருவரை நேர்வழியில் சிந்திக்க வைக்கிறது.                                                                                                                                          தன்னைப் பற்றிய சுய உணர்வே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள். நம்மைப் பற்றி நாம் என்ன எண்ணம் கொண்டிருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது மகிழ்ச்சியும் சாதனையும் அமைகின்றன என்கிறார்கள்.                                                 வளமான மனமும் தன்னைப் பற்றிய மேன்மையான சுய உணர்வும் கொண்டவர்கள் தன்னை மதிப்பதோடு தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் மதிக்கிறார்கள். ஒருவருடைய சுய உணர்வே அவருக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. சுய உணர்வு உடையவர்கள் தங்கள் பலத்தைத் தெரிந்துகொள்வதோடு தங்களுடைய பலவீனத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால், தங்களுக்குக் கிடைக்கும் உண்மையான பெயரையும் புகழையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

எ ன் தா ய் மொழியாம் தமிழ் மொழிக்கு

எ ன்  தா ய்  மொழியாம் தமிழ் மொழிக்கு 




செந்தமிழ் தாய் மொழியாள் – நம்
செவ்விதழ் வாய் மொழியாள்
சிந்திய தேன் மொழியாள் – நம்
இந்திய தேசத்து செம்மொழியாள்..

மூலமொழிக்கு முதல் மொழியாம் – நம்
முத்தமிழ் செந்தமிழ் தனி மொழியாம்
முத்துக் குளித்த முதல் மொழியாம் –நம்
மூத்தோர் மூதுரைத்த இன் மொழியாம்..

அகத்தியன் முதலாய் தொல் காப்பியன் ஈறாய்
ஆயிரம் பாவலர் புனைந்த நல் நாற்றாய்
இலக்கணச் சுவையோடு நற்குணம் ஏற்றாய்
உள்ளம் பெரிதுவக்க அடியார்க்கு ஈந்தாய்..

உந்தி முதலா முந்திவளி தோன்றி
உயிர்முன் மெய்யாய் மெய்முன் உயிறாய்
ஒற்றுமுன் பகுதி விகுதி சந்தியாய் தெளிந்த
நல்பதம் சேர்க்கும் கண்மனியாள்..

அகம் புறம் நானூறும் அடக்கி
தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கியமும்
பதினெண் கீழ்மேல் கணக்கென
பொழிந்த நற்றமிழ் கண்மனியாள்..

தமிழின் மீது தணியாத தாகம் கொள்வோம்
தரணியில் சிறந்தது தமிழென மொழிவோம்
தமிழால் தமிழ்க்குடி தழைக்கு மென்போம்
தமிழே உயிர் மூச்செனக் கொள்வோம்..





பெண்களின் முன்னேற்றம்

பெண்களின்  முன்னேற்றம்

 



பெண்கள் நம் நாட்டின் கண்கள்..

பெண்களை மதித்து – மனப்

புண்களை அழிப்போம்..

 

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள்  நடத்த வந்தோம் என்ற

புரட்சிக்கவிஞனின் பொன்னான வரிகள்

பலித்தது இந்தப் பாரினில்..

 

அடுப்பூதும் பெண்களுக்கு

படிப்பெதற்கு என்ற காலம் போய்

உலகை ஆளப்பிறந்தவர்கள்

பெண்கள் என அவையம் அனைத்தும்

அறியச்செய்தவர்கள்..

 

இப்பூமியில் பிறக்கும் போதே

பெண்கள் புரட்சியாளராகவே பிறக்கிறார்கள்..

பெண்களுக்கு இரு மனம்

ஒன்று பூக்கடை மற்றொன்று சாக்கடை

எனச்சொல்வதைக்  கேட்டிருப்போம்

ஆனால் இன்று

பெண்கள் பிறக்கும் போதே

சாதனை, சரித்திரம் படைக்கவும்

பூவும் புயல் வீசும் எனக்காட்டவும்

விதையிட்ட இடத்திலே விருட்சமாகவும்

விளக்கொளியில் மடியும்

விட்டில் பூச்சிகளாக இல்லாமல்

விடியலைத்தேடும்

வின்மீன்களாகவுமே பிறக்கிறார்கள்..

 

பெண்ணடிமை பேணிய விஷவித்தகர்கள்

வீழ்ந்தொழிந்தனர் என

பாருலகை ஆளவந்த பெண்களுக்கு

புத்துணர்ச்சி தருவோம்..

 

ஏழு பருவ மங்கையரான

பேதை, பெதும்பை, மங்கை,

மடந்தை, அரிவை, தெரிவை,

பேரிளம்பெண் என அனைவரையும்

ஏற்றம் பெறச்செய்வோம்..

 

ஆடவரின் ஊனக்கண்களில் உள்ள

துரும்பை அகற்றி

ஆணுக்கு நிகர் பெண்களே என்ற

மந்திரச்சொல் அறிவோம்..

 

மேலே எழுதப்பட்ட கவிதைப்படைப்பு எனது சொந்த படைப்பு எனச்சான்றளிக்கிறேன். இதற்கு முன் வெளியானது இல்லை.வெளியாகும் வரை பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனச்சான்றளிக்கிறேன்.