புதன், 19 அக்டோபர், 2022

 

தீபாவளித் திருநாள்

 

            தீபாவளி திருநாள் என்பது இருளை அகற்றி ஒளிக்கு வழி நல்குவதே ஆகும். தீயசக்திகளைக் களைந்து நல்லவைகளை மனங்களில் சுமக்கும் நன்னாளே இந்தத் தீபாவளித் திருநாள். ஒவ்வொரு வருடமும் நாம் தீபாவளித் திருநாளை அனைவரும் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். உற்றார், உறவினர்களோடு இனிப்புகளைப் பகிர்ந்து, புத்தாடை உடுத்தி அன்பைப்பிறரோடுப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், உண்மையிலேயே இந்தத்  தீபாவளித் திருநாள் உணர்த்தும்  அர்த்தம் என்ன? இத்திருநாள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன?

            வாழ்க்கையில் அடக்குமுறைகளால் கட்டுண்டுள்ளச் சமுதாயத்தை விடுதலை செய்து, சமுதாயத்தில் அவரும் ஒரு அங்கத்தினர் என்பதை மற்றவர் புரியும் வகையில் செயல்படுவத்துவதே இத்திருநாளின் முக்கிய நோக்கமாகும். அறியாமை என்னும் அகஇருளை அகற்றி, நம்பிக்கை ஒளி ஏற்றுவதே இத்தீபாவளித்திருநாள் நமக்கு உணர்த்தும் செய்தியாகும். புத்தாடை உடுத்தி, இனிப்புகள் பறிமாரி, வீட்டில் தீபங்களை ஏற்றினால் மட்டும் தீபாவளி திருநாள் முழுமையடைந்து விடுவதில்லை. தன்னிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து, அவர்களது மகிழ்வில் இன்பம் காண்பதே உண்மையானத் தீபாவளித் திருநாளாக இருக்க முடியும்.

            நம்பிக்கை இழந்து வாழ்வின் இறுதி எல்லைக்குச் சென்றவர்களை மீட்டு, சமுதாய முற்போக்குச் சிந்தனைகளை அவர்களின் மனங்களில் தவளவிட்டு, மகிழ்ச்சி தீபங்களை ஏற்றி, வாழ்வில் புது வாசல்களைத் திறந்துவிடுவது தான் இத்தீபஒளித் திருநாள் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் பற்றி ஐயன் திருவள்ளுவர், வாழ்வில் பகிர்தலை மிக அழகாக எடுத்துக்கூறுவார். வாழ்க்கையில் எப்போதாவது வெற்றிடம் தோன்றும்போது மனமகிழ்வைத் தொழைத்து, நிம்மதியின்றி அழையும் அநேக மக்களை நாம் வாழும் இந்த சமூகத்தில் பார்க்க முடிகிறது. அன்பைப் பகிரும்போது தான் மகிழ்ச்சி பிறக்கிறது.            மகிழ்வைப் பகிறும்போது மனம் நிறைவடைகிறது. இத்தீபஒளித்திருநாளில் நம் மனங்களில் உள்ள அழுக்குகளை அகற்றிவிட்டு, நல்ல நினைவுகளைச் சுமக்கும் மனம் படைப்போம். மனிதரை மனிதராக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டுவோம். அகக்களையை  அகற்றி நம்பிக்கையூட்டும் புது சமுதாயம் படைப்போம். அனைவர் வாழ்விலும் இன்பம் மலர்ந்து மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கட்டும். இனிய  தீபாவளி வாழ்த்துக்கள் .

 

                                                        தீபாவளித் திருநாள் 

மகிழ்வைப் பொழியும் ஒளியே – மனம்

மகிழும் முழு நிலவே

மங்கிய மனங்களைத் தட்டி – தினம்

மாந்தர் மகிழ்ந்திட மலர்ந்தாயே..

 

அக இருளை அகற்றி – மனம்

புதுப்பிறப்பெய்திடவே

ஆழ்ந்துறங்கிய மனிதரையெல்லாம் – தினம்

தட்டியெழுப்பிடப் பிறந்தாயே..

 

சிந்தனைத் துளிர் மழுங்கிய  - மனம்

வாடித்துயர் கொள்ளுமே

சாதனைத் தீப்பற்றியெரிய – தினம்

நாடித்துயில் கொள்ளுமே..

 

சமூக மாற்றம் தேடியே – மனம்

நாடித்தேடி ஓடுமே

அடிமைச் சமூகம் ஒழித்திட – தினம்

புதுச் சிந்தனைத் துளிர்த்திடுமே..

 

புத்தாடைப் புது இனிப்புகளை – மனம்

மகிழ்ந்து தந்திடவே

நாளும் புதுப்படைப்பு பெற்றிட – தினம்

மனம் இசைவு கொள்ளுமே..

 

மனிதம் சகமனிதர் புரிந்து – மனம்

ஏங்கித் தவித்திடவே

தீபங்கள் பல ஏற்றி – தினம்

மகிழ்வில் நாளும் திழைத்திடவே..

 

வியாழன், 18 நவம்பர், 2021

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

இரண்டடி ஆசான்
இருந்தான் அன்றொரு நாள்
ஏழடி சீர் படைத்து மானிடத்தை
ஏற்றம் பெறச் செய்தான்

தாடியுடன் வார்த்தை
வேள்விகளைச் செய்து
மனித மனங்களை
கசக்கிப்பிழிந்த
கொல்லன் அவன்

அறம் பொருள் இன்பம்
என்ற மூன்று இயலையும்
குறையாத சுவையோடு
பந்திவைத்தப் பகுப்பாளன்

ஏடில்லா காலத்திலே
எழுத்தானி கொண்டு
ஓலைச்சுவடியில்
வரிகளை வடித்த
வார்த்தை வித்தகன்…

அரசலையும், புரசலையும்
அரசியலையும், அறிவியலையும்
அன்றே அறிவுக்கு கிட்டச் செய்த
ஆய்வாளன் அவன்…

வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே என
புதுவைக்குயில் புதிய சரித்திரம்
படைத்த சிம்ம சொப்பனமே…

காலங்களைக்கடந்து  நிற்கும்
கருத்து குவியல்களை
கண்ணோடு ஒத்தியெடுக்க- இரு

கண்களும், கரங்களும் போதாதே…

ஆசிரியர் தின விழா – கவிதைத்தொகுப்பு


ஆசிரியர் தின விழா – கவிதைத்தொகுப்பு



அறப்பணியாம் ஆசிரியப்பணியை சீருடனும் சிறப்புடனும் ஆற்றிக்கொண்டிருக்கும் நமது பேராசிரியப் பெருமக்களுக்கு நம் மாணவர்கள் சார்பாக ஆசிரியர் தின விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இந்த கவிதைத் தொகுப்பை சமர்ப்பிக்கிறேன்.

கல்வி ஆசான்களை அடையாளப்படுத்தும்
அற்புதத் திருநாள் இந்த
ஆசிரியர் தின நாள்..

ஆசிரியர்களின் நல் ஆசானாய்த் திகழும்
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்
இந்த ஆசிரியர் தின நாள்..

வந்தனம் செய்வோம் நல்
வந்தனம் செய்வோம்
கல்வி மூலம் வாழ்க்கைக்கு நல்
வழி கர்றுத்தந்த ஆசான்களுக்கு
வந்தனம் செய்வோம்..
நின்ற இடத்திலே நின்று
நித்திய சத்திய புத்திய
போதனைகளைக் கற்பித்து
வெற்றியின் உச்சத்தைத் தொட
வேதனைகளையும், சோதனைகளையும்
துச்சமென மதித்து
சாதனை, சரித்திரம் படைக்க
சூத்திரப் பாடம் கற்றுத்தரும்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..
கலைகள் யாவும் கற்றுத்தந்து
கட்டிக்கரும்பு சாறுபிழிந்து
பாடங்களை பாங்கோடு பருகச்செய்யும்
புத்திரர்களான நம் ஆசான்களை
வந்தனம் செய்வோம்..
சிந்திக்க மறந்த மனங்களை
உள்ளன்பு உவகையோடு தட்டியெழுப்பி
கல்வி தானம் தரும் நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..
ஐந்தில் வளையாததை அகவை
முப்பதிலும் வளைத்து நெளித்து
தங்கத்துகள்களால் புடமிட்டு
மிளிரச்செய்யும் மந்திரம் தெரிந்த நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..

கல்வி பிறருக்கு கொடுப்பதால்
என்றுமே குறைவுபடாது என்ற
ஒளவைப் பாட்டியின் ஓதலை உணர்ந்து
உவப்புடனே உள்ளங்களைத் தொட்ட நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..

இக்கவிதைத் தொகுப்பு வெறும்
வார்த்தை ஜாலங்களுக்காக எழுதவில்லை
மாணவர்களாகிய எங்களுக்கு நல்வழிகாட்டும்
உங்களை இந்த ஆசிரியர் தின நாளில்
புகழ்வது தகும் என்பதாலே..

புதன், 29 செப்டம்பர், 2021

கடல் நீரில் என் கண்ணீர் பயணம்

                கடல் நீரில் என் கண்ணீர் பயணம்


ஊமையான என் பேனாஉதிற்கும் உன்னத முத்துக்கள்…

கடல் நீரில் ஒரு நெடும்பயனம் – என்
கண்ணீரோடு..
இதுவரை நீங்கள்
யாருக்காகவும் எதற்காகவும்
உங்களின் கண்களில்
கண்ணீர் வரவில்லை என்று நினைத்தாலும்
இந்த கவிதை பயணத்தின் மூலம் – என்
கவிதை வரிகள்
உங்களின் கண்களை குளமாக்கும்
என்பதில் ஐயமில்லை…
வாழ்க்கைப் படகில் பயணிக்க
எத்தனிக்கும் எல்லாரும் – என்
கவிதை என்னும் படகில் ஏறி
எழுத்து என்ற துடுப்பேந்தி
பயணம் செய்ய வாருங்கள்..
கலியுக உலகை மறந்து
கடந்து வந்த குழந்தை, மாணவ
இளமை பருவ காலங்களை
இனிமையாய் நினைத்து
ஆசையோடு அசைபோட
ஆவலுடன் வாருங்கள்...
எந்த கவலை துன்ப துக்க
நேரமானாலும், இந்த கண்னீர் பயணம்
உங்களின் மனங்களை படிக்கும்..
இதயங்களை இலகுவாக்கும்..
எப்பேர்ப்பட்ட பயணம்’’
இது ஒரு வரம்..


நதியின் நாதம்

                                                                நதியின் நாதம்
                                                     

                                                                       
நதியின் நாதம்
ஓடுகின்ற நதிக்கு 
  ஓடையின் வழியே                                                                                                                ஓதியது யாரோ?                                                                                                                                 நதி பிறந்தது நந்தவனத்தில்                                                                                                         நாங்கள் வாழ்வது அந்த வனத்தில்                                                                                             நதியின் நாதமும் அடியும்                                                                                                               நலன்கள் யாவும் பொழியும்                                                                                                           கரைதோறும்  நதியின் நுரை அரும்பும்                                                                                    குழவிகூட கொஞ்சும் அமுதம்                                                                                                     களிறு கூட கெஞ்சும் கமுகம்                                                                                                        சாதக சூத்திரங்களுக்கு நதியொரு அடி -என்று                                                                       சூசக சொல்லொன்றை கதியென்று நீ படி                                                                             கதிக்கும் யாவுன் கதியாகுமோ?                                                                                               கற்பனைக்கு அது ஈடாகுமோ?                                                                                                     நதிக்கொரு கீதம்                                                                                                                                 பதிக்கொரு கீதம்                                                                                                                                 கதிக்கொரு கீதம்                                                                                                                                சதிக்கொரு கீதம்                                                                                                                                சாதிக்கொரு கீதம்                                                                                                                             வீதிக்கொரு கீதம்                                                                                                                               வீட்டுக்கொரு கீதம்                                                                                                                           நதி வாழும் நாளெல்லாம் -நம்                                                                                                      நாடும் வாழும்                                                                                                                                     

புதன், 22 செப்டம்பர், 2021

மொழி


வாழ்வின் நெறிமுறையே மொழி                                                                                                வாழ்க்கையே மொழி...                                                                                                                     சத்தத்தின் வயிற்றில் தவமறியாது                                                                                         தானாகப் பிறப்பது மொழி..                                                                                                             நெகிழ்வையும், மகிழ்வையும்                                                                                                       நெஞ்சோடு இணைத்து                                                                                                                   எளிதில் பிறர் புரியும் வன்னம்                                                                                                      எடுத்தாளப்படுவது மொழி..                                                                                                           ஒலிப் பெற்ற பிள்ளைகள்                                                                                                               முத்தான எழுத்துக்கள்..                                                                                                                   கோர்க்கப்படும் முத்துக்கள் அழகான                                                                                       மாலையாவதைப்போல                                                                                                                 கோர்க்கப்படும்  எழுத்துக்கள் அர்த்தமுள்ள                                                                           வார்த்தைகளாக வார்க்கப்படும்..                                                                                                 மொழியின் மேன்மையை                                                                                                               மொழியறிந்தார் மொழிய - வழி                                                                                                   மொழியப்படுவது நீயதியே...                                                                                                         மொழியின் மாண்பையும்                                                                                                               மேன்மையையும் அறிந்து                                                                                                             மொழிக்கு முதல் வணக்கத்தை                                                                                                   மொழிவோம்...