புதன், 19 அக்டோபர், 2022

 

                                                        தீபாவளித் திருநாள் 

மகிழ்வைப் பொழியும் ஒளியே – மனம்

மகிழும் முழு நிலவே

மங்கிய மனங்களைத் தட்டி – தினம்

மாந்தர் மகிழ்ந்திட மலர்ந்தாயே..

 

அக இருளை அகற்றி – மனம்

புதுப்பிறப்பெய்திடவே

ஆழ்ந்துறங்கிய மனிதரையெல்லாம் – தினம்

தட்டியெழுப்பிடப் பிறந்தாயே..

 

சிந்தனைத் துளிர் மழுங்கிய  - மனம்

வாடித்துயர் கொள்ளுமே

சாதனைத் தீப்பற்றியெரிய – தினம்

நாடித்துயில் கொள்ளுமே..

 

சமூக மாற்றம் தேடியே – மனம்

நாடித்தேடி ஓடுமே

அடிமைச் சமூகம் ஒழித்திட – தினம்

புதுச் சிந்தனைத் துளிர்த்திடுமே..

 

புத்தாடைப் புது இனிப்புகளை – மனம்

மகிழ்ந்து தந்திடவே

நாளும் புதுப்படைப்பு பெற்றிட – தினம்

மனம் இசைவு கொள்ளுமே..

 

மனிதம் சகமனிதர் புரிந்து – மனம்

ஏங்கித் தவித்திடவே

தீபங்கள் பல ஏற்றி – தினம்

மகிழ்வில் நாளும் திழைத்திடவே..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக