வியாழன், 15 அக்டோபர், 2015

டாக்டர். அப்துல் கலாம் பிற்ந்த நாள்

அப்துகலாம் பிறந்தநாள் விழா
இராமேஸ்வரக் கடலில் பிறந்த முத்து
இறைவன் நமக்குத்தந்த சொத்து..

 அறிவியலின் ஆசான் அவரே
அரசியலை விடுத்து
இல்லால் துனையின்றி
இமையம் வரை உயரலாம் என்பதற்கு
இவரே எடுத்துக்காட்டு..

ஆராய்ச்சியிலேயே அகவை
அனைத்தையும் கழித்தவர்..

சாதிக்கப்பிறந்த மனிதரில்
சிறந்த மானிடர் நீர்..

ஏழையும் பாழையும் உமக்கு
அழையா விருந்தாளிகலே..

இளைஞர்களின் கைகளில் – இந்த
உலகம் சுழல வேண்டும் என
வேட்கை கொண்டவர்..

மாணவர்களின் மனங்களில்
தழும்பாய் சுவடாய்
இதயக்கீரல்கள் செய்தவர்..

அடுத்திருப்பவனும் மனிதன் தான்  என்று
அனைவரையும் அறியச் செய்தவர்..

இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களில்
சுடரொளி உதிக்கச்செய்தவர்..

சத்திய சோதானை வேள்வியிலே
காந்திய புத்திய போதனைக்கற்றவர்..
மகாத்மாவின் வழி நடந்து – மக்கள்
மனங்களில் மங்காப்புகழோடு வாழ்பவர்..

 அணுஆராச்சியை இந்திய வாசலிலே
விளையாட வைத்தவர் - அதை
ஆழமாய் அற்புதமாய் பதித்தவர்..

இந்தியா வல்லரசாவது
இன்றைய இளைஞர்களின் கைகளிலே என
இயன்றவரை எடுத்துக்கூறியவர்..
இது டாகடர்.எ. பி. ஜெ அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களுக்கு விடுக்கும் அழைப்பு..

இளைஞனே எழு”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக