புதன், 29 செப்டம்பர், 2021

கடல் நீரில் என் கண்ணீர் பயணம்

                கடல் நீரில் என் கண்ணீர் பயணம்


ஊமையான என் பேனாஉதிற்கும் உன்னத முத்துக்கள்…

கடல் நீரில் ஒரு நெடும்பயனம் – என்
கண்ணீரோடு..
இதுவரை நீங்கள்
யாருக்காகவும் எதற்காகவும்
உங்களின் கண்களில்
கண்ணீர் வரவில்லை என்று நினைத்தாலும்
இந்த கவிதை பயணத்தின் மூலம் – என்
கவிதை வரிகள்
உங்களின் கண்களை குளமாக்கும்
என்பதில் ஐயமில்லை…
வாழ்க்கைப் படகில் பயணிக்க
எத்தனிக்கும் எல்லாரும் – என்
கவிதை என்னும் படகில் ஏறி
எழுத்து என்ற துடுப்பேந்தி
பயணம் செய்ய வாருங்கள்..
கலியுக உலகை மறந்து
கடந்து வந்த குழந்தை, மாணவ
இளமை பருவ காலங்களை
இனிமையாய் நினைத்து
ஆசையோடு அசைபோட
ஆவலுடன் வாருங்கள்...
எந்த கவலை துன்ப துக்க
நேரமானாலும், இந்த கண்னீர் பயணம்
உங்களின் மனங்களை படிக்கும்..
இதயங்களை இலகுவாக்கும்..
எப்பேர்ப்பட்ட பயணம்’’
இது ஒரு வரம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக